Monday, March 15, 2010

பச்சானந்தாவின் சிறு வயது லீலைகள் .

எங்கள் குடும்ப ராஜ குரு மற்றும் பல பேரின் வாழ்நாள் துன்பங்களுக்கு காரணமான து -- என்ற பா.சு ஐஎரை கண்டாலே எங்கள் குடும்பத்து ஆண்களுக்கு ஒரே கோபம். ஆத்திரம். ஏனென்றால் எதாவது பேசி அவர்கலுக்கு திருமணம் நடத்தி விடுவார். எனது மாமா ஒருவர் ஒவ்வொரு கல்யாணதில்லையும் குத்து கவுண்டர் போட்டு அதில் வரும் பணத்தில் அனாதை ஆசிரமத்திற்கு நன்கொடை அளிக்க முயன்றார். பலருக்கு இந்த ஐடியா பிடித்தாலும் பெரிசுகளின் அதட்டலால் அதை செய்ய முடியவில்லை. நல்ல சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். வந்தது ஒரு சந்தர்ப்பம்.திட்டம் தீட்டப்பட்டது. மலை முழுங்கி மகாதேவன் என்றும் "Drunken Monk" என்று பாராட்டப்பட்ட பா.சு விற்கு மணி கட்ட தீர்மானிக்கபட்டது. இடம் :சென்னை. நிகழ்ச்சி: ஹீரோவின் தாத்தாவிற்கு ஒரு ஹோமம். அதற்கு வந்தவர் பலர். அதில் ஒரு வினோத ஜோடி. கா மற்றும் த. இருவருமே பா.சு வை பதம் பார்க்க திட்டம் தீட்டினர். தங்களால் அதை செய்ய முடியாது என்றதால் அதை செய்து முடிக்க இளிச்ச வாயர்களை தேடினர். அவர்களுக்கு உடனே நினைவுக்கு வந்தது நமது நாயகன் மற்றும் அவரது முந்திரி கொட்டை மச்சான் "ம". இந்த இருவருமே அழைகபட்டனர். எதோ சாப்பிடதான் கூபிட்றான்களோ என்று நினைத்து அந்த இருவரும் சென்றனர். அப்போது பா.சு இவர்கள் இருவரையும் அழைத்து தாகமா இருக்கு ஒரு சோடா வாங்கிட்டு வாங்க, ஒரே தலை வலி என்றார். கா மற்றும் த ஜோடிக்கு பொறி தட்டியது. உடனே அவர்கள் பா.சு விடம் "அய்யா நாங்க சொல்றோம் என்று சொல்லி எங்களை அழைத்தனர் அய்யாவுக்கு போயி நல்ல சோடாவும் அப்படியே ஒரு சாரிடானும் வாங்கிட்டு வாங்க, அதோட அந்த சாரிடானை பொடி பண்ணி அந்த சோடாவில் கலந்து கொண்டாங்க என்று என்று சொல்ல இந்த சுந்தோப சுந்தரர்கள் கிளம்பினார்கள். சோடாவை வாங்கி விட்டு மருந்து கடைக்கு போய் ஆறு சாரிடான் வாங்கி நாடு ரோட்டில் உட்காந்து கல்லை எடுத்து பொடி செய்து சோடாவில் கலக்கி திரும்பவும் மூடி எடுத்து வந்து பா.சு விடம் கொடுப்பதுக்குள் ஞா சு குறுக்கே வந்து எனக்கு சோடா குடு என்று சொல்ல , இல்லை இல்லை இது பா.சு விற்கு ஸ்பெஷல் சோடா என்று சொல்லிவிட்டு பா.சு விடம் கொடுத்தனர். பா.சு வும் தம்பிங்களா உங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல சுசு(சுந்தோப சுந்தரர்கள் ) குஷியாக இருந்தனர். கலக்கல் சோடாவை குடித்த பா.சு வின் உடல் குளிங்கியது. கண்கள் விஜயகாந்த் கண்கள் போல சிவந்தது. பிறகு தள்ளடியாபடியே வீட்டிற்குள் தொலை காட்சி பார்க்க சென்றார். அங்கு குருவாயூர் யானைகளை பற்றி ஒரு டாகுமெண்டரி டீவீயில் ஓடியது.அதை பாசு உற்று உற்று பார்த்த படியே சிரிக்க மக்களுக்கோ ஒரு அதிர்ச்சி.
திடீர் என்று "21 dogs 21 dogs " என்று பாசு சொன்னார். பார்த்த மற்றும் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி. அவர் யானை பார்த்துதான் நாய் என்றார் என்பதும் சுத்தி நின்ற 18 பட்டி மக்களுக்கும் புரிந்தது. நாங்கள் செய்த விஷமமும் தெரிந்தது. பிறகு அவர் கண்களில் தாரை தாரையா கண்ணீர் வழிய அப்போது எங்கிருந்தோ "கண்ணில் என்ன கார்காலம், கன்னங்களில் நீர் கோலம் " என்ற பாடல் ஒலித்தது.அவரை கை தாங்கலாக பிடித்து போய் படுக்க வைத்ததும் நாங்கள் இருவரும் திட்டு வாங்கியதும் கனவு போல இருக்கிறது.
இரவு முழுவதும் அவருக்கு உடம்பு தூக்கி தூக்கி போட்டதாகவும் , அந்த சத்தத்தை கேட்ட எழுத்த வீட்டு அண்ணி " யார் அது நைட்டுல உரலை இடிக்கிறது " என்று கேட்டதாகவும், அவர் உடம்பில் இருந்து ஆவி பிரிய இருந்ததாகவும் , இன்னொரு வாத்தியாரை பூஜைக்கு ஏற்பாடு செய்ததாகவும் ஒரு பேச்சு இன்னமும் இருக்கு.
ஆனால் எல்லோருக்கும் முன்னாடி பாசு எந்திரிச்சு பூஜைக்கு ரெடி செய்து கொண்டிருந்ததை பார்த்து அனைவரும் தலை சுற்றி சாய்ந்ததுதான் இந்த கதையின் ஹைலைட்டு.
சோடாவில் சாரிடான் கலந்தால் போதை வரும் என்று யாரோ சொல்லியதை டெஸ்ட் செய்து பார்க்க விரும்பிய கா & த குழுவினர் செய்த அலம்பல் இது.
பி.கு : இந்த formulavai திரு.த.. கம் patent செய்து பெரும் பணக்காரர் ஆகி விட்டதாக ஒரு செய்தி அடிபடுகிறது. நிசமா

No comments:

Post a Comment